search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி ஏவுகணை"

    • புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
    • அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலசோர்:

    இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இதில், அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அணு குண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில், புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏவுகணை இன்று காலை ஒடிசா கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. பாலசோர் கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கிமீ முதல் 2,000 கிமீ வரை பயணம் செய்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-IV ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. #AgniIV
    ஒடிசா மாநில கடலோர மாவட்டமான சண்டிபூர் பலசோரில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படும்.

    இங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4-வது தளத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் அக்னி-IV ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்த ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதேபோல் அணுஆயுதங்களையும் சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது.
    ×